நீரோடும் காவிரியில் நீ வந்து நீராடி நீருக்கும் காதல் வரும் உன் மேலே… நீ நடக்கையில் உன் கால் கொலுசும் இசைக்கருவி ஆகுமடி உன்னாலே… உனைப் பார்த்தால் எனக்குள்ளே ஒரு மாற்றம் வரும் தன்னாலே… வழித்தெரியாமல் என் கால்கள் உனைத்தொடரும் பின்னாலே… உனைப் பார்க்கும் நாள் எல்லாம் எனக்கோ அது திருநாளே… உறங்கும் பொழுதும் கனவில் வருவாளே என் அவளே… அன்புடன் சிவகுரு